Monday, March 3, 2008

சுடும் குரல்


இலைகளில் வெயில்
எழுதுகிறது ஒளிக்கவிதை.

வெக்கையை சுவாசிக்கும் சுவர்கள்
மனிதர்களில்
உஷ்ணமூச்சை உமிழ்கின்றன.
தண்ணீர் தேடி நெடுநேரமாக
அலைந்துகொண்டிருக்கிறதொரு தெருநாய்.
இக்கொடு மதியத்தில்
எதையோ கூவி விற்றபடி போகும்
முதிய பெண்ணின் குரலில்
செருப்பணியாத பாதங்களின்
சூடு தகிக்கிறது.


0 comments: