Sunday, March 16, 2008

நீ வருவாயென..


அன்பே நீ உணர்வாய்
திடீரென உவர்ப்பு அதிகமான
இக்கடலில் என் கண்ணீர்
மாத்திரமே கலந்திருக்குமென்பதை.

உன்னிடம் சேர்க்கப்பட மாட்டாது
என்றறிந்தும்
மிதந்து வரும் இவ்வலைகளினூடே
அனுப்பி விடுகிறேன்
என் காதலையும்,கண்ணீரையும்.

நீ சென்ற படகினை
பின்தொடர்ந்த காற்றின் வேகத்துடனே
கரைந்து சென்று விட்டது
என் பசியும்,தூக்கமும்.

நீயற்ற பகற்பொழுதுகலில்
நரகத்தின் சாயல் தெரிகிறதெனக்கு
அதைவிடக் கொடுமை
நித்திரையற்று உன் நினைவுகள் சுமந்து
கடக்க நேரிடும் இரவுகள்.

ஐந்து நாள் கடந்தும்
திரும்பாத உன் படகின் மீது
நம்பிக்கையற்று போய்விட்டது
உன் உறவுகளுக்கு.

எனக்கு தெரியும்..
என்றேனும் நீ வருவாய்

அன்று..

வெறுமயாய் கழிந்த
பகற் பொழுதுகளையும்
முத்தங்கள் பறிமாறப்பட்ட
நமதுஇரவுகளையும்
இப்பாறையில் மோதும்
அலைகளின் இறைச்சலின் மத்தியில்
நிச்சயம் நாம் மீட்டெடுப்போம்.


க.பிரசன்னா