Tuesday, March 18, 2008

பத்தினிகள்...


முடிவு செய்யப்படாத
கூந்தல் ஒன்றுக்காய்
மல்லிகைப் பூ
சேமிக்கும் ஒருத்தன்,
மூன்று தூர நிமிடங்களுக்கு
முந்ணூறு ரூபாய் கொடுக்கிறான்

எந்த விரல் சூட்டுமென,
சில கூந்தல் காரிகளுக்கு
முந்தானை விலகும்வரை
தெரிவதில்லை

ஊட்டியில் கடல் கொந்தளிப்பாம்!
பத்தினிகள் என்று
யாருக்கு யார் சூட்டுவது?

முகவரி மாறும் கூந்தல் காரிகள்
தாழ்ந்து விடவில்லை
முகவரி உள்ளதெனக் கூறும்
வாடகை வீட்டுக்காரிகளுக்கு…!


அ.டெனிசியஸ்

0 comments: